உலகம்

ஓமன் வளைக்குடாவில் இலங்கையர்கள் பயணித்த கப்பலை சுற்றிவளைத்த ஈரான்!

ஓமன் வளைக்குடாவில் பயணித்த எரிபொருள் டேங்கர் கப்பலை நேற்று ஈரானிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கப்பலில்  இலங்கையர்கள் உட்பட 18 பேர் பயணித்ததாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட பணியாளர்களில் இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தினர் அடங்குவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

6 மில்லியன் லிட்டர் எரிபொருளை சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நிறுத்த உத்தரவுகளை புறக்கணித்தல், தப்பிச் செல்ல முயன்றது மற்றும் கப்பலின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நேற்று பிற்பகல் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக ஈரான் இதுபோன்ற பல கப்பல்களைக் கைப்பற்றியுள்ளது.

உலகின் மிகக் குறைந்த எரிபொருள் விலைகளைக் கொண்ட ஈரானில் இருந்து கடல் வழியாக அண்டை நாடுகளுக்கு எரிபொருள் கடத்தல் பொதுவானது என்றும் வெளிநாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!