“மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் தங்கும் விடுதிகள் இலக்கு வைப்பு”!
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் விடுதிகள் ஈரானின் இராணுவ இலக்குகளாகக் கருதப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள பொதுமக்களையும் கட்டிடங்களையும் அமெரிக்க படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.
அமெரிக்கப் படைகளுக்குத் தங்குமிடம் வழங்கும் விடுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்பதால், அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தற்காப்பு நடவடிக்கையாக அமெரிக்கப் படைகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தாக்கப் போவதாக ஈரான் ராணுவம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இந்தப் பதற்றமான சூழல் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள வணிக நிறுவனங்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.





