ரொனால்டோவுக்கு சிறப்பு சிம் கார்டை வழங்க ஈரான் திட்டம்

ஈரான், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பிற வெளிநாட்டு கால்பந்து வீரர்களுக்கு சிறப்பு சிம் கார்டை வழங்க விரும்புகிறது,
இது அவர்கள் தடையின்றி இணையத்தை அணுக அனுமதிக்கு.
இந்த செயல் இது ஈரானில் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
“Irancell இன் CEO உடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு Irancell சிம் கார்டுகளை கட்டுப்பாடற்ற இணையத்துடன் வழங்க விரும்புகிறோம், அதனால் அவர்கள் ஈரானுக்குள் நுழையும் நேரம் முதல் அவர்கள் வெளியேறும் வரை அதைப் பயன்படுத்தலாம்” என்று தெரிவிக்கப்பட்டது.
ஈரானில் இணையம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பல்லாயிரக்கணக்கான இணையதளங்கள் மற்றும் அனைத்து முக்கிய உலகளாவிய செய்தி மற்றும் சமூக ஊடக தளங்களும் தடுக்கப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் நடுப்பகுதிக்குப் பிறகு, போலீஸ் காவலில் மஹ்சா அமினியின் மரணம் நாடு முழுவதும் பல மாதங்களாக நீடித்த எதிர்ப்புகளைத் தூண்டியபோது, கட்டுப்பாடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டன குறிப்பிடத்தக்கது.