உலகம் செய்தி

ஈரான் பலமாகவுள்ளது! ட்ரம்ப் கனவு காண்கிறார்!

ட்ரம்ப் நினைப்பது போன்று, 48 மணிநேர காலக்கெடு அர்த்தமற்றது என மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளரும் பத்திரிகையாளருமான (Center for Middle East Strategic Studies and a journalist) அபாஸ் அஸ்லானி (Abas Aslani) கூறியுள்ளார்.

ஈரான் படைகளிடம் எந்த ஒரு பலவீனத்தையும் காண முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் தன் அடையாள உணர்வு (Consciousness of one’s identity) மேலோங்கி நிற்பதால், தற்போதைக்கு போர் நிறுத்தத்தை எதிர்பார்க்க இயலாது, என்ற தொனி இவருடைய ஆய்வின் உள்ளடக்கத்தில் தெரிகிறது.

ஹார்முஸ் நீரிணை பகுதியை முழுமையாக மீண்டும் திறக்க வேண்டும் என ட்ரம்ப், வழங்கிய 48 மணி நேர கால அவகாசம், தொடர்பாக ஈரான் பெரிதாக அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை எனவும் அபாஸ் அஸ்லானி விபரித்துள்ளார்.

நீண்டகாலப் பாதுகாப்பு நோக்கில், ஒரு மூலோபாயச் சமன்பாட்டை நிறுவக்கூடிய தருணம் வரை போராட்டத்தைத் தொடர, அமெரிக்கா முயற்சிக்கிறது.

ஆனால் அது சாத்தியமில்லை.

ஏனெனில், தற்போதைய போர்ச் சூழலில் இருந்து ஈரான் பின்வாங்குவதற்கான அறிகுறிகள் இல்லை என்கிறார்.

இருந்தாலும், அமெரிக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஈரான் அதிகளவு விலைகொடுக்க நேரிடும் எனவும் அபாஸ் அஸ்லானி எச்சரிக்கிறார்.

அபாஸ் அஸ்லானி ஒரு ஈரானிய பத்திரிகையாளர், ஈரான் வெளியுறவுக் கொள்கை பற்றி எழுதுகிறார். தற்போது தஸ்னிம் நியூஸ் ஏஜென்சியின் (Tasnim News Agency) உலக மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றுகிறார்.

முன்பு ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சியில் (Fars News Agency) இதே பதவியை வகித்தவர்.

ஈரான் அணுசக்தி விவகாரங்கள்பற்றிய விமர்சன கட்டுரைகளை எழுதிவரும் இவர், அமெரிக்கவும் ஈரானும் தற்போதைக்கு ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து சமதான முயற்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை என வாதிடுகிறார்.

அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!