செய்தி

இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலை மறுக்கும் ஈரான்

இஸ்ரேலின் ஆளில்லா வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும் இப்போதைக்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் இஸ்பாஹான் நகரில் உள்ள ராணுவ விமானத் தளத்தில் வெடிகுண்டுச் சத்தம் மூன்று முறை கேட்டதாக ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதற்குமுன் இஸ்ரேலிய ஏவுகணைகள் ஈரானை நேற்று தாக்கியதாக செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இஸ்பாஹானில் உள்ள விமான நிலையத்திலும் வெடிகுண்டுச் சத்தம் கேட்டது என்று ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்தது

அதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இஸ்பாஹானில் பல அணுச்சக்தி நிலையங்கள் உள்ளன. ஈரானிய வான்வெளியில் பறப்பதிலிருந்து பல விமானங்கள் திசை திருப்பப்பட்டன.

சென்ற வாரம் ஈரான் இஸ்ரேலை நோக்கி வானூர்திகளை அனுப்பியது. ஏப்ரல் முதல் தேதி சிரியாவில் உள்ள தெஹ்ரான் (Tehran) தூதரகம் மீது நடத்தப்பட்ட ஆகாயத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் அந்தத் தாக்குதலை நடத்தியது.

ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரப்போவதாக இஸ்ரேல் முன்னதாகக் கூறியிருந்தது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!