உலகம் செய்தி

ஹர்முஸ் நீரிணை: ஈரான் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் நட்பு நாடுகள் தமது நாட்டுடன் முறையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஈரான் பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.

அத்துடன், எதிரி நாடுகளால் ஈரானிய கடற்கரைகள் அல்லது தீவுகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், பாரசீக வளைகுடா பகுதி முழுவதும் முடக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அனைத்து கடல்சார் போக்குவரத்து வழிகளும் துண்டிக்கப்பட்டு, பிராந்தியம் முழுவதும் போக்குவரத்து முடக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய மோதல் சூழலுக்கு ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.

தனது கடல்சார் எல்லைகளைப் பாதுகாக்க ஈரான் எத்தகைய கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இருக்கின்றது என்பதை அந்நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் வெளிப்படுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!