உலகம்

நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதியை கைது செய்தது ஈரான்!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதியை (Narges Mohammadi) ஈரானிய அரசாங்கம் இன்று கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நர்கீஸ் முகமதியின் சகோதரரை மேற்கோள் காட்டி இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக  சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

பாரிஸை தளமாகக் கொண்ட அறக்கட்டளை, வழக்கறிஞர் கோஸ்ரோவ் அலிகோர்டியின் ( Khosrow Alikordi) நினைவு விழாவின் போது முகமதி “வன்முறையாக தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஈரானின் மிக முக்கியமான மனித உரிமை வழக்கறிஞர்களில் ஒருவரான முகமதி 2023 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருந்தார்.

கடந்த இரண்டு தசாப்தங்களில் பெரும்பாலான காலத்தை அவர் தெஹ்ரானின் எவின் சிறையில் கைதியாகக் கழித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!