செய்தி விளையாட்டு

IPL Match 39 – கொல்கத்தா அணிக்கு 199 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலிங் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் – சாய் சுதர்சன் களமிறங்கினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

அடுத்து வந்த பட்லர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் சதத்தை நோக்கி வெகுவாக முன்னேறிய கில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் அடித்துள்ளது.

இதனையடுத்து 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி கொல்கத்தா களமிறங்க உள்ளது.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி