விளையாட்டு

IPL 2025: தோனி விளையாடினால் கிடைக்கும் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பு வீரர்கள் தக்க வைப்பு தொடர்பான புதிய விதிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் அன்கேப்ட் வீரர் என்ற விதியை மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் இருந்து இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகிவில்லை.

இந்த மாத இறுதியில் தோனியுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தோனியை அன் கேப்ட் பிளேயராக எடுத்தால் ரூ. 4 கோடிக்கு தக்கவைத்துக்கொள்ளலாம்.

தற்போது தோனி அமெரிக்க பயணத்தில் இருக்கிறார் என்றும், இந்தியா வந்ததும் பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் சிஎஸ்கே தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், இதில் அதிகபட்சமாக ஐந்து இந்திய & வெளிநாடு வீரர்களையும், இரண்டு கேப் செய்யப்படாத வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ளலாம்.

தோனியை தவிர சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதீஷா பத்திரனா ஆகியோரை தக்க வைத்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

(Visited 116 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!