விளையாட்டு

IPL 2024: குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த 5-வது தமிழ் வீரர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாட தமிழ்நாடு வீரர் சந்தீப் வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் சந்தீப் வாரியருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்திய அணி குஜராத் டைட்டன்ஸ். இந்தாண்டு தொடரில் அந்த அணியின் கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றுள்ளார்.

குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு சென்றதால் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முகமது ஷமி குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டை சேர்ந்த சந்தீப் வாரியர் ரூ.50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக சந்தீப் வாரியர் விளையாடியுள்ளார். குஜராத் அணியில் இணைந்துள்ள 5வது தமிழ்நாடு வீரர் சந்தீப் வாரியர் ஆவார்.

ஏற்கனவே விஜய் சங்கர், சாய் கிஷோர், ஷாரூக் கான் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் குஜராத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!