உலகம் செய்தி

சமூக ஊடகங்கள் மூலம் நபிகள் நாயகம் மீது இழிவு!!! சவுதியில் இளம் பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சவூதியில் சமூக ஊடகங்கள் மூலம் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதற்காக இளம் பெண் ஒருவரை ஊடக ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

எக்ஸ் தளம் மூலம் நபிகள் நாயகத்தை நிந்திக்கும் உள்ளடக்கம் அடங்கிய செய்திகள் மற்றும் வீடியோக்களை இளம் பெண் பகிர்ந்ததால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த பெண் நபிகள் நாயகத்தின் மனைவி கதீஜாவை அவதூறாகப் பேசியது கண்டறியப்பட்டுள்ளது.

ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தனது விசாரணையை முடித்ததும், வழக்கு பொது வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

அந்நாட்டு சட்டப்படி, தெய்வ நிந்தனைக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 லட்சம் ரியால் அபராதமும் விதிக்கப்படும்.

இதற்கிடையில், தேசிய தினத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவில் தனியார் மற்றும் இலாப நோக்கற்ற துறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு செப்டம்பர் 23-ஆம் திகதி பொது விடுமுறை என்று மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

தேசிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செப்டம்பர் 24 அன்று விடுமுறை அளிக்கப்படும்.

கொண்டாட்டங்களில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!