இலங்கை

இலங்கையில் மின்கட்டண உயர்வு தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் (PUCSL) இந்த காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட  PUCSL இன் தலைவர் பேராசிரியர் கே. பி. எல். சந்திரலால் தொடர்புடைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் மின்சாரக் கணக்கீட்டு முறைகள் குறித்த மறுஆய்வுக்குப் பிறகு, அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு செலவுகள் காரணமாக, இலங்கை மின்சார வாரியம் (CEB) மின்சாரக் கட்டணத்தில் 6.8% அதிகரிப்பைக் கோரியதைத் தொடர்ந்து பொதுமக்களின் கருத்துக்களை கோரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!