சிட்னி கத்தி குத்து தாக்குதல் தொடர்பில் அவுஸ்ரேலிய பொலிஸார் வெளியிட்ட தகவல்!

சிட்னியின் புறநகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாத செயல் என ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதவெறியை அடிப்படையாக வைத்து இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக போலீசார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் கரேன் வெப் கூறுகையில், “எல்லா உண்மைகளையும் ஆய்வு செய்த பிறகே” இந்த முடிவு எட்டப்பட்டது. சந்தேக நபர் பொலிஸாருக்கு தெரிந்த 16 வயதுடையவர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் பேராயர் உள்பட 4 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 16 times, 1 visits today)