ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவி பணம் பெறுவோருக்கு வெளியான தகவல்

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை பெற்று வருவோரின் நிதி நிலை தொடர்பாக மாற்றங்கள் ஏற்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மனியில் போர்கன் கிள்ட் என்று சொல்லப்படுகின்ற சமூக உதவி பணத்தை பெறுகின்றவர்களுக்கு சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஜெர்மனியின் தொழில் அமைச்சர் ஒபேட்டஸ் ஹைட் அவர்கள் உத்தேசித்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மனியில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் வேலை இல்லாது இருப்பதாக ஆராயப்பட்டுள்ளது.

அதனால் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்வாறு வேலை இல்லாது இருக்கும் போது தற்பொழுது ஜொப் சென்டர் என்று சொல்லப்படுகின்ற சமூக உதவி திணைக்களமானது இவர்களுக்குரிய பணத்தை வழங்கி வந்துள்ளது.

இந்நிலையில் புதிய உத்தேச சட்டத்தின் படி 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தொடர்ந்து வேலை இல்லாமல் இருக்கும் பொழுது இவர்களுக்கு ஆபேட் என்ட் அம்ன்ட் என்று சொல்லப்படுகின்ற தொழில் அலுவலகமானது இவர்களுக்குரிய கொடுப்பனவு வழங்கும் என்றும்,

இதேவேளையில் இவ்வாறு இவர்கள் தொழில் இல்லாது இருக்கும் பொழுது இவர்களுக்குரிய ஆபேட் குலோஸ் ஃபெஸியர் என்று சொல்லப்படுகின்ற மற்றும் ரெண்ட்டட் ஃபெஸியர் என்று சொல்லப்படுகின்ற காப்புறுதிகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!