ஐரோப்பா

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தொடர்பில் வெளியான தகவல்

ஜெர்மனியில் 11 மில்லியன் மக்கள் பயண அட்டையை பயன்படுத்தி வருகின்றார்கள் என்று தெரியவந்துள்ளது.

49 யூரோ பயண அட்டையானது கடந்த முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தற்பொழுது இந்த பயண அட்டையானது ஒரு வருடத்துக்கு மேலாக பாவணைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்பொழுது வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தின் அடிப்படையில் மொத்தமாக 11 மில்லியன் மக்கள் பயண அட்டையை பயன்படுத்தி வருகின்றார்கள்.

மேலும் 15 மில்லியன் மக்கள் இந்த டொஷ்லான் டிக்கடை பயன்படுத்தினால் மட்டுமே இலாபத்தை ஏற்படுத்தும் என்று புள்ளி விபரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 49 யூரோ பயண அட்டை அமுலுக்கு வந்த பின் 8 சதவீதமான மேலதிக பயண அட்டைகள் விற்க்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையானது தொடர்ந்து நடைபெற்றால் இது இலாபகரமான நடவடிக்கையாக அமையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலை வழங்குகின்றவர்கள் தங்களது தொழிலாளர்களுக்கு ஜொப் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற வேலை செய்கின்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற பயண அட்டைகளை கொள்வனவு செய்வதற்கு உத்வேகத்தை அளிப்பதன் மூலம் இவ்வகையாக 15 மில்லியன் இலக்கை அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கிடையே இந்த பயண அட்டை தொடர்பில் பேச்சு வார்த்தை இடம்பெற்று வருகின்மை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content