இலங்கை

இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து கூறிய இந்திய பிரதமர்

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி x கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் எமது மக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் நாம் செயற்பட முடியும் என புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க x கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!