ஐரோப்பா

ஸ்காட்லாந்தில் இந்தியத் தூதருக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளால் நேர்ந்த நிலை!

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் இந்தியத் தூதரை காலிஸ்தான் பயங்கரவாதிகள் திடீரென வழிமறித்து தடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவிற்கு செல்ல முயன்ற நிலையில், அவரை உள்ளே நுழைய விடாமல் அங்கிருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது.இது குறித்த காணொளி ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் விக்ரம் துரைசாமியை ஸ்காட்லாந்து ஆல்பர்ட் டிரைவில் உள்ள கிளாஸ்கோ குருத்வாராவிற்குள் நுழைய விடாமல் தடுப்பது தெளிவாகத் தெரிகிறது.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்