இந்தியா

இந்தியா – கார் சக்கரத்தில் சிக்கி தொண்டர் பலி; முன்னாள் முதல்வர்மீது வழக்குப்பதிவு

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் சக்கரத்தில் சிக்கி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.

அவ்விவகாரத்தில், ஜெகன் மோகன் ரெட்டி, அவரின் உதவியாளர் நாகேஸ்வர் ரெட்டி, முன்னாள் எம்.பி சுப்பா ரெட்டி, முன்னாள் அமைச்சர் விடதலா ரஜினி, முன்னாள் எம்.எல்.ஏ பேர்னி நானி ஆகியோர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கார் ஓட்டுநர் ரமண ரெட்டியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பலியான தொண்டரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 18ஆம் திகதிதி, ஆந்திரம் மாநிலம், சட்டெனப்பள்ளி தொகுதிக்கு அம்மாநில முன்னாள் முதல்வர் வருகை தந்தார். அவரைக் காண பெருங்கூட்டம் திரண்டது. காரில் பேரணியாகச் சென்ற ஜெகனுக்கு வழிநெடுகிலும் அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தநிலையில், சாலையில் முன்வரிசையில் நின்றிருந்த தொண்டர் ஒருவர் எதிர்பாராதவிதமாக ஜெகன்மோகனின் காரின்முன் நிலை தடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் விழுந்ததை கவனிக்காமல் ஓட்டுநர் காரை இயக்கியத்தில், காரின் முன்பக்கம் அந்தத் தொண்டர்மீது ஏறியது.அதில் அவர் உடல் நசுங்கி பலியானார். பலியான நபர் சீலி சிங்கையா என்பதும் அவருக்கு வயது 65 என்றும் விசாரணையில் தெரிய வந்தது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!