இந்தியா

இந்தியா – காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்து ; 3 ராணுவ வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.

ராம்பன் மாவட்டத்தில் பேட்டரி சாஷ்மா என்ற இடத்தில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது.

உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இறந்த ராணுவ வீரர்கள் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மான் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பள்ளத்தாக்கில் விழுந்த வாகனத்திலிருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.இறந்தவர்களின் உடல்கள் ராம்பன் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே