இந்தியா

இந்தியா – குஜராத்தில் உலகின் மிகப்பெரிய தரவு மையத்தை அமைக்கவுள்ள முகேஷ் அம்பானி

இந்தியப் பெருஞ்செல்வந்தரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உலகிலேயே ஆகப் பெரிய தரவு மையத்தை அமைக்கத் திட்டமிட்டு வருவதாக புளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது.அம்மையம் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் அமையவுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் என்விடியா (NVIDIA) நிறுவனத்திடமிருந்து ‘ஏஐ’ பகுதி மின்கடத்திகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சென்ற ஆண்டு அக்டோபரில் நடந்த என்விடியா ஏஐ உச்சநிலை மாநாட்டின்போது, இந்தியாவில் ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்க இணைந்து செயல்படவுள்ளதாக ரிலையன்சும் என்விடியாவும் அறிவித்தன.

அதற்கு முந்திய செப்டம்பர் மாதத்தில், இந்தியாவில் ஏஐ மீத்திறக்கணினிகளைத் (சூப்பர்கம்ப்யூட்டர்) தயாரிக்க பங்காளித்துவம் செய்துகொண்டுள்ளதாக அவ்விரு நிறுவனங்களும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் ஏஐ இலக்குகளை எட்ட குறிப்பிடத்தக்க ஆதரவளிப்பதாக இந்திய அரசாங்கமும் உறுதியளித்திருந்தது. தொழில்முனைவர்களுக்கு நிதியாதரவு, ஏஐ திட்டப்பணிகள் உள்ளிட்டவற்றுக்கு 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆயினும், அம்முயற்சிகள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றன.

(Visited 44 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!