இந்தியா செய்தி

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா படுதோல்வி!!! இருவர் தற்கொலை

 

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி மோசமான தோல்வியைத் தாங்க முடியாமல் 2 பேர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மற்றும் ஒடிசாவின் ஜாஜ்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 23 வயது இளைஞர்கள் இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து, இரு இளைஞர்களும் மிகுந்த சோகத்தில் இருந்ததாக அவர்களது உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

தோல்வியின் அதிர்ச்சியை தாங்க முடியாமல் அவர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்த இருவரில் ஒருவர் மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி