இந்தியா

இந்தியா – விஜிலென்ஸ் துறை சோதனையின் போது பிடிபடாதிருக்க ஜன்னல் வழியாகப் பணத்தை வீசிய அரசு அதிகாரி

ஊழல் கண்காணிப்புத் துறையினர் தம் வீட்டைச் சோதனையிட்டபோது, நபர் ஒருவர் ஜன்னல் வழியாக ஐந்நூறு ரூபாய் பணக்கட்டுகளை வீசியெறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் நிகழ்ந்தது.

பைகுந்த நாத் சாரங்கி என்ற அந்த நபர் மாநில ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளராக இருக்கிறார்.அவர் ஊழல் செய்வதாகவும் தமது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பதாகவும் நீண்டகாலமாகப் புகார் வந்தது.

இதனையடுத்து, ஒடிசா ஊழல் ஒழிப்புத் துறையினர் அவரது வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர் அப்போது, ரூ.2 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணமும் வேறு சொத்துகளும் சிக்கின.

சாரங்கி புவனேஸ்வர் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கமும் அங்குலில் உள்ள இன்னொரு வீட்டில் ரூ.1.1 கோடி ரொக்கமும் சிக்கியதாக அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.

“ஊழல் கண்காணிப்புத்துறை அதிகாரிகளைக் கண்டதும் சாரங்கி ஜன்னல் வழியாகப் பணக்கட்டுகளை வீசியெறிந்தார். சாட்சிகளின் முன்னிலையில் ரொக்கம் கைப்பற்றப்பட்டது,” என்று இன்னோர் அதிகாரி கூறினார்.

அத்துடன், அங்குலில் உள்ள சாரங்கியின் பரம்பரை வீட்டிலும் உறவினர்களது வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. புவனேஸ்வரில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே