இந்தியா

இந்தியா – பள்ளியில் சிறப்பு வகுப்பின் போது சண்டை; 14 வயது மாணவன் குத்திக் கொலை

சக மாணவனுடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து, 14 வயது மாணவன் குத்திக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 3) இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நிகழ்ந்தது.

ஏழாம் வகுப்பில் படித்து வந்த இஷு குப்தா என்ற அம்மாணவனுக்கும் கிருஷ்ணா என்ற இன்னொரு மாணவனுக்கும் பள்ளி நேரத்திற்குப்பின் நடந்த சிறப்பு வகுப்பின்போது கடுமையான வாக்குவாதம் மூண்டது.

வகுப்பு முடிந்தபின் பள்ளிக்கு வெளியே கிருஷ்ணாவும் வேறு சில மாணவர்களும் சேர்ந்து இஷுவைத் தாக்கியதாகக் காவல்துறை தெரிவித்தது.

அப்போது, அவர்களில் ஒரு மாணவன், இஷுவின் தொடையில் கத்தியால் குத்தினான். தகவலறிந்த பள்ளி ஊழியர்கள் இஷுவிற்கு முதலுதவி அளித்து, அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இஷு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.இதன் தொடர்பில் 19 முதல் 31 வயதிற்குட்பட்ட எழுவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

“இவ்விவகாரத்தில் அவர்களின் பங்கு, நோக்கம் முதலியவை குறித்து விசாரித்து வருகிறோம். இறந்த மாணவனின் உடல் உடற்கூறாய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது,” என்று காவல்துறையின் அறிக்கை தெரிவித்தது.

 

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!