இந்தியா

பாகிஸ்தானின் விமான நிறுவனங்கள்,விமானங்கள் மீதான தடையை நீட்டித்துள்ள இந்தியா

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்கான தடையை இந்திய அரசாங்கம் அக்டோபர் 24ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 26 பேர் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர்ச் சூழல் நிலவியது.

ஆப்பரேசன் சிந்தூர் என்ற பெயரில், பயங்கரவாதிகளைக் குறிவைத்து இந்திய அரசாங்கம் தாக்குதல் நடத்தியது.இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிந்துநதி நீர் நிறுத்தம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

அதன் தொடர்ச்சியாக இந்திய வான்வெளியில் பறப்பதற்குப் பாகிஸ்தான் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

முதலில், ஏப்ரல் 30ஆம் திகதி தொடங்கி மே 24ஆம் திகதி வரை விதிக்கப்பட்டிருந்த தடை பின்னர், செப்டம்பர் 24ஆம் திகதிக்கு நீட்டிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாகத் தற்போது அக்டோபர் 24ஆம் திகதி வரை அத்தடையை நீட்டித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!