உலகம் செய்தி

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் டாக்காவில் உள்ள விசா மையத்தை மூடிய இந்தியா

மோசமடைந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டாக்காவில்(Dhaka) உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்பட்டுள்ளது.

டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு சமீபத்தில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் வங்காளதேச(Bangladesh) அரசியல் தலைவர்களின் இந்தியாவிற்கு(India) எதிரான அறிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டாக்காவில் உள்ள ஜமுனா ஃபியூச்சர் பார்க்கில்(Jamuna Future Park) உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்படுகிறது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். இன்று சமர்ப்பிப்பதற்காக முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பின்னர் ஒரு திகதியில் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்” என்று விசா விண்ணப்ப மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வங்காளதேசம் முழுவதும் 16 விசா விண்ணப்ப மையங்கள் உள்ளன. அனைத்து மையங்களும் கூட்டாக ஒரு வருடத்தில் 22 லட்சம் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துகின்றன.

வங்காளதேசத்தில் விசா விண்ணப்பங்களைப் பெறுவதற்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா(State Bank of India) மட்டுமே.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!