இலங்கை

இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு – அரசாங்கம் விளக்கம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு தொடர்பில் அச்சமடைய தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

தேவைக்கும் வழங்கலுக்கும் இடையிலான வேறுபாடுகளினால் டொலரின் பெறுமதியில் ஏற்ற இறக்கம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களின்படி, ரூபாவின் பெறுமதி நேற்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 335 ரூபாவாக பதிவாகியுள்ளது. கொள்முதல் விலை 331 ரூபாவாக காணப்பட்டது.

ஆனால் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 318.99 ரூபாயாக காணப்பட்ட அதேவேளை, கொள்வனவு விலை 303.19 ரூபாயாக பதிவாகியுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!