இலங்கை

தகாத உறவு… வாடகை அறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணி்ன் சடலம்!!

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு உயிரிழந்தவர் பலுகொல்லாகம, மெகொடவெவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விசாரணையில், உயிரிழந்த பெண்ணுக்கும், தகாத உறவில் இருந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக, குறித்த நபர் பெண்ணின் கழுத்தை போத்தல் துண்டு ஒன்றினால் அறுத்து கொலை செய்துள்ளார்.எனினும் சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.

நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 28 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்