ஆசியா

தாய்லாந்தில் துரியன் பழ வாடையால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

தாய்லாந்தில் துரியன் பழ வாடையைத் தாங்க முடியாமல் பேருந்து ஊழியர் ஒருவர் மயங்கிவிழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

8ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் பெண் ஊழியர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

பேருந்தில் ஏறிய பயணி ஒருவர் தம்முடன் சில துரியன் பழங்களைக் கொண்டுவந்தார். அதன் வாடை தமக்கு ஒருவித ஒவ்வாமை உணர்வை ஏற்படுத்தியதாக அந்த ஊழியர் கூறினார்.

மூச்சுவிடுவதற்குச் சிரமப்பட்ட அவர் பின்னர் மயங்கிவிழுந்துள்ளார். அவர் பேருந்து இருக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் புகைப்படம் Facebookஇல் பகிரப்பட்டது.

கடந்த மே மாதம் தாய்லந்தின் பேங்கோக் பொதுப் போக்குவரத்து ஆணையம், துரியன் பழங்களின் வாடையைப் “பொதுத் தொல்லையாக” வகைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!