இலங்கையில் அழகு சாதன பொருட்களால் உயிரிழப்புகள் கூட ஏற்படும் அபாயம்!
அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் முறையான கட்டுப்பாடுகள் இன்மையால், எதிர்காலத்தில் துரதிஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அதன் தலைவர் திரு.உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகளின் கவனம் உடனடியாக செலுத்தப்பட வேண்டுமென திரு.உபுல் ரோஹன கூறுகிறார்.
(Visited 51 times, 1 visits today)





