இலங்கை

இலங்கையில் சிறுவன் ஒருவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு!

மனநலம் பாதிக்கப்பட்டு தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவர் வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையின் 6வது மாடியில் உள்ள அறையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த சிறுவன்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பன்வில – கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருகச என்ற சிறுவனு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!