இஸ்ரேலில் மற்றும் ஒரு இலங்கை இளைஞர் படுகாயம்!

பினி பிராக்கில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இளைஞர் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்ட பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். காயமடைந்த இளைஞர் அக்குரெஸ்ஸவைச் சேர்ந்த விமுக்தி மதுஷங்கா ஆவார்.
காயமடைந்த இளைஞரை சிகிச்சைக்காக அனுப்ப தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நிமல் பண்டாரா மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இஸ்ரேலில் டெல் அவிவ், ஹைஃபா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களில் ஒரு கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னல் இடிந்து விழுந்ததில் ஒரு இலங்கைப் பெண் சிறு காயங்களுக்கு ஆளானார்.
காயமடைந்தவர் இஸ்ரேலின் பேட் யாமில் பணிபுரியும் இலங்கைப் பெண் சந்திமா தில்ருக்ஷி ஆவார். இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா, அவரது நிலை மோசமாக இல்லை என்று கூறினார்.