ஐரோப்பா

பிரித்தானியாவில் தீராத வயிற்றுவலியுடன் அவதிப்பட்ட இளம்பெண்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரித்தானியாவில், வயிற்றுவலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அங்கு அவருக்கு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

சுமார் 10 நாட்களாக வயிற்றுவலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த 37 வயது பெண். சரி என்னதான் பிரச்சினை என்று பார்த்துவிடுவோம் என அவர் மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார்.மருத்துவமனையில் அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், பரிசோதனைகள் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.ஆனால், அது சாதாரண கர்ப்பம் அல்ல,அதாவது, பெண்களின் சூலகம் அல்லது கருப்பையில் உருவாகும் கருமுட்டை, ஆணுடைய உயிரணுவுடன் இணையும்போது, பெண்ணின் கர்ப்பப்பையை வந்தடைந்து, கர்ப்பப்பையின் சுவருடன் தன்னை இணைத்துக்கொண்டு ஒரு குழந்தையாக உருமாறி வளரும்.

சிலருக்கு, இப்படி கர்ப்பப்பையில் குழந்தை உருவாகாமல், ஃபாலோப்பியன் குழாய் என்னும் கருமுட்டைக்குழாயில் குழந்தை உருவாகிவிடுவதுண்டு. இத்தகைய அசாதாரண கர்ப்பம், தாய்க்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

வயிற்றுவலியுடன் மருத்துவமனைக்குச் சென்ற இளம்பெண்: மருத்துவர்களே எதிர்பார்க்காத அதிர்ச்சி | Baby Growing In Girl Bowel Uk

இந்த பிரித்தானிய பெண்ணுக்கோ, கருமுட்டைக்குழாயில் கூட குழந்தை வளரவில்லை, அது அவரது வயிற்றுக்குள் வளர்ந்திருந்தது. அதாவது, உணவுக்குழாயின் ஒரு பகுதியான வயிற்றுக்குள் அந்த குழந்தை வளர்ந்திருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.அதுவும், அவர்கள் அந்த பெண்ணை பரிசோதனை செய்யும்போது, அது ஆறுமாதக் குழந்தையாக வளர்ந்துவிட்டிருந்தது.

இப்படி கர்ப்பப்பைக்கு வெளியே வளரும் குழந்தையால், தாயின் உயிருக்கு ஆபத்து என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்துவிட்டார்கள்.இப்படி கர்ப்பப்பைக்கு வெளியே ஒரு குழந்தை வளர்வதே ஆச்சரியம் என்றால், இந்த குழந்தை பிழைத்துக்கொண்டது என்பது அதைவிட பெரிய ஆச்சரியம்.அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அந்த குழந்தை, கைக்குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவப்பிரிவில் அனுமதிக்கப்பட்டது.25 நாட்களில் அந்தப் பெண் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட, இரண்டு மாதங்களுக்குப் பின் அவரது குழந்தையும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!