கண்டி மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்!
கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கிணங்க, கஹவத்த, குருகொட, புளுகஹதென்ன, ஹிராகடுவ, கஹல்ல, தெலும்பு கஹவத்த, நுகவெல, பலனகல, அஸ்கிரிய, வேகிரிய, புதிய பல்லேமுல்ல, பழைய பல்லேமுல்ல, யட்டிஹலகல, கொண்டதெனிய, ரஜபிகில்ல, மெதவல, ஹுலுகம்மன ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
மின்சார சபையின் அவசர திருத்த வேலைகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)





