கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய தகவல்!

கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் 16 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.
கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நீர் விநியோகத் தடையானது இன்று மாலை 5மணி முதல் மறுநாள் முற்பகல் 9 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)