இலங்கை

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் முக்கிய அறிவிப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் (SLBFE) வெளிநாட்டு வேலைக்காகச் செல்லவிருக்கும் குழந்தைகளைக் கொண்ட பெண்களுக்கான புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

2-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்கள், சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களால் வழங்கப்பட்ட DS4 ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் தங்களின் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் விண்ணப்பங்களை அவர்களது பகுதி கிராம சேவகர் அதிகாரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நோட்டரி மூலம் சான்றளித்து, அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி ஏற்பாடுகள் குறித்த பாதுகாவலர்களின் உத்தரவாத ஆவணங்களைப் பெற்றால் மட்டுமே DS4 ஆவணம் வழங்கப்படும்.

குழந்தைகள் இல்லாத பெண்கள், தமக்கு குழந்தைகள் இல்லை என்ற ஆவணத்தை பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் பிள்ளைகளின் பொறுப்புகள் பற்றிய ஆவணங்கள் 09 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என SLBFE தெரிவித்துள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் பல்வேறு மறு நுழைவு விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று SLBFE மேலும் தெரிவித்துள்ளது.

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content