இலங்கையில் சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பக் காலம் அக்டோபர் 9 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
அன்று நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்ப முறை மூடப்படும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி திகதி எந்த காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என்றும், கடைசி திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவிருக்கும் சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் ஆன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும்.
இது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: 0112-784208/ 0112-784537/ 0112-785922.
கூடுதலாக, 0112-784422 என்ற தொலைநகல் எண் அல்லது gceolexansl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.





