ஐரோப்பா

ஐ.நா-வில் தீர்மானம் நிறைவேற்றம் ; பாலஸ்தீனத்தை உறுப்பினராக்க 143 நாடுகள் ஒப்புதல்

பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.

இப்போரை நிறுத்த கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. இதையடுத்து ஐ.நா. பொதுச்சபையின் அவசர கூட்டம் நடந்தது. இதில் பாலஸ்தீனத்தை ஐ.நா. பொதுச்சபையில் முழு நேர உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது.

தீர்மானத்திற்கு 143 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 9 நாடுகள் எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் பேசும்போது, இந்த தீர்மானம் ஐ.நா சாசனத்தின் தெளிவான மீறல் என்றார்.மேலும் தீர்மான நகலை கிழித்தார். காகிதங்களை கிழிக்கும் கருவியில் தீர்மான நகலை போட்டார்.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!