இலங்கை

இலங்கையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 112 அதி சொகுசு வாகனங்களில் ஐந்தை விடுவிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்த வாகனங்களை இலங்கை சுங்கத்திற்கு திருப்பி அனுப்புமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவின் பிரகாரம் வாகனங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், பின்னர் அவை இலங்கை சுங்கத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அறுபது கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான இந்த ஐந்து வாகனங்கள் மூலம் நாட்டுக்கு 300 மில்லியன் ரூபா சுங்க வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்தது.

உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், குறித்த வாகனங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு மேலும் உத்தரவிட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)
See also  இலங்கை : முகநூல் விருந்து நடத்திய இரண்டு பெண்கள் உட்பட 16 மாணவர்கள் கைது
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content