ஐரோப்பா

அரச குடும்பத்துடன் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறேன் – இளவரசர் ஹாரி

இங்கிலாந்து மன்னர் சார்லசின் இளைய மகன் இளவரசர் ஹாரி. தந்தை மற்றும் சகோதரர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹாரி தனது மனைவி, குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்

இதற்கிடையே இங்கிலாந்து கோர்ட்டில் நடந்து வந்த தனது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழக்கில் இளவரசர் ஹாரி தோல்வி அடைந்தார். அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது..

கடந்த 2020-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம், ஹாரி இங்கிலாந்தில் இருக்கும்போது தானாகவே போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்தது. இதை இதை எதிர்த்துதான் ஹாரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில் அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக ஹாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
எனது குடும்பத்தினருடன் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறேன். இனிமேல் தொடர்ந்து போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த போராட்டத்தை என் தந்தை இன்னும் இன்னும் எவ்வளவு காலம் வைத்திருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை.

எனது போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்வதற்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டில் தோல்வியடைந்தது என்னை பேரழிவிற்கு ஆளாக்கியுள்ளது.இந்த பாதுகாப்பு விஷயங்களால் தந்தை சார்லஸ் என்னுடன் பேசமாட்டார். ஆனால் நான் இனி சண்டையிட விரும்பவில்லை.

ஒரு புத்தகம் எழுதியதற்காக என் குடும்பத்தில் சிலர் என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். நிச்சயமாக, அவர்கள் பல விஷயங்களுக்கு என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால் என் குடும்பத்துடன் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

 

(Visited 28 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்