இலங்கை

வவுனியாவில் மனைவியைக் கொலை செய்துவிட்டு மகளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த கணவர்

வவுனியா – ஈச்சங்குளம் காவல் பிரிவுக்குட்பட்ட கல்மடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தலையில் காயங்களுடன் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஈச்சங்குளம் காவல் நிலையத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

கல்மடு பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக நேற்று காலை அந்தப் பெண் தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையைச் செய்த பின்னர், கணவர் தனது 2 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி காவல் நிலையத்திற்கு சரணடையச் சென்றார்.

சந்தேக நபர் 33 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து ஈச்சங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!