வவுனியாவில் மனைவியைக் கொலை செய்துவிட்டு மகளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த கணவர்
வவுனியா – ஈச்சங்குளம் காவல் பிரிவுக்குட்பட்ட கல்மடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தலையில் காயங்களுடன் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஈச்சங்குளம் காவல் நிலையத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கல்மடு பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக நேற்று காலை அந்தப் பெண் தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையைச் செய்த பின்னர், கணவர் தனது 2 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி காவல் நிலையத்திற்கு சரணடையச் சென்றார்.
சந்தேக நபர் 33 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து ஈச்சங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





