ஜப்பானை தாக்கும் மிக பெரிய சுனாமி : ஆபத்தில் மக்கள்!

ஜப்பான் நாட்டை சேர்ந்த மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி என்பவரைத் தான் “புதிய பாபா வங்கா” என்று அழைக்கிறார்கள். இவரும் பாபா வாங்காவை போலவே வரும் காலம் குறித்துப் பல கணிப்புகளைச் செய்து வருகிறார்.
இவர் அடுத்த மாதம் ஜப்பானை ஒரு பெரிய சுனாமி தாக்கும் என்று கணித்துள்ளார். இது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலரும் தங்கள் ஹாலிடே சுற்றுலாவையும் ரத்து செய்து வருகிறார்கள்.
சரியாக ஒரு மாதம் கழித்து, அதாவது ஜூலை 5ம் திகதி ஒரு பேரழிவு ஏற்படும் என்பதை ரியா கணித்துள்ளார். ஜப்பானுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் பிளவு ஏற்படும் என்றும் இதனால் சுனாமி அல்லது மிகப் பெரிய பூகம்பம் ஏற்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.
கடந்த 2011ல் 18,000 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட டோஹோகு நிலநடுக்கம் மற்றும் சுனாமியை அவர் முன்பு துல்லியமாகக் கணித்ததால் அவரது இந்த கணிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.