ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையில் அதிரடி வானிலை மாற்றம்

அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் நீடித்த கடும் வெப்பமான வானிலை முடிவுக்கு வந்துள்ள நிலையில், விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குயின்ஸ்லாந்து முதல் விக்டோரியா வரை பரவவுள்ள இந்த வானிலை மாற்றத்தினால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, கடந்த வாரம் சிட்னி கடற்கரையில் நிலவிய உயர் அழுத்த மண்டலம் நகர்ந்துள்ளதால், ஜனவரி 15 முதல் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மழை காரணமாக விக்டோரியாவில் நிலவி வந்த காட்டுத்தீ அபாயம் குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!