செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பற்றி எரியும் வீடுகள் – தீயணைப்பாளரை போல வேடமிட்ட திருடன்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் மாலிபு நகரில், காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட வீட்டில் திருடச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் தீயணைப்பாளரைப் போல வேடமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 12 பேரில் அவரும் ஒருவராகும். தீயில் சேதமடைந்த வீட்டினுள் திருட்டில் ஈடுபட்டபோது அவர் பிடிபட்டார்.

எத்தகைய நெருக்கடி நிலையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த காத்திருக்கும் நபர்கள் இருக்கிறார்கள் என்று லாஸ் ஏஞ்சலிஸ் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

காட்டுத் தீயில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 100,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

(Visited 61 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி