தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்
தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (09) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த ஹோட்டலுக்கு முன்பாக மது அருந்திக்கொண்டிருந்த இருவர், அந்த ஹோட்டலின் உரிமையாளரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்த நபர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





