ஹாங்காங் (Hong Kong) தீவிபத்து – பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!
ஹாங்காங் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
ஹாங்காங்கின் (Hong Kong) வடக்கு தை போ (Tai Po) மாவட்டத்தில் உள்ள உயரமான குடியிருப்பு வளாகத்தின் மூன்று தொகுதிகளில் இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
31 மாடி கட்டிடத்தில் பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான மக்கள் கட்டிடத்திற்குள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்க மீட்பு பணியாளர்கள் போராடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்பு பணிகள் தொடர்கின்ற நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகளுக்கு
ஹாங்காங்கில் (Hong Kong) தீவிபத்து – நால்வர் பலி, ஆபத்தான நிலையில் இருவர்!




