இலங்கை

இலங்கை பாடசாலை மாணவிகளின் நேர்மை – குவியும் பாராட்டு

மீகலேவ, மகாவலி தேசிய பாடசாலையைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள், வீதியில் இருந்து எடுத்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் அடங்கிய பார்சலை உரிமையாளரிடம் கையளித்துள்ளனர்.

மீகலேவ, மகாவலி தேசிய பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் இரு மாணவிகள் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர்.

இந்தச் செயலை மீகலேவ, தம்மிதா கிராமத்தைச் சேர்ந்த யுவனிகா மற்றும் சந்துனி இமல்கா ஜயசூரிய ஆகிய இரு மாணவிகளே இந்த செயலை செய்துள்ளனர்.

கற்றலில் சிறந்து விளங்கும் இந்த இரண்டு மாணவர்களும் கடும் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என மீகலேவ, மகாவலி தேசிய பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

இந்த இரண்டு மாணவர்களும் எங்கள் பாடசாலைக்கு புகழைக் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, நான் உட்பட நாட்டுக்கே உதாரணம் காட்டப்பட்டுள்ளது. இவ்விரு மாணவர்களுக்கும் பாடசாலையின் ஆசிரியப் பணியாளர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் பாராட்டு செலுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

(Visited 26 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content