புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளான ஹோண்டுராஸ் விமானம் ; குறைந்தது 12 பேர் பலி

ஹோண்டுராஸ் கடற்பகுதியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரோட்டன் தீவிலிருந்து புறப்பட்டுச் சென்ற சில வினாடிகளில் அந்த விமானம் கடலில் விழுந்ததாக ஹோண்டுராஸ் தீயணைப்புப்படை திங்கட்கிழமை (மார்ச் 17) இரவு கூறியது.
எட்டு பயணிகள் இன்னும் விமானத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது என்று தீயணைப்புப் படைத் தலைவர் வில்மர் குவரேரோ தெரிவித்தார்.
விமானம் கடலில் விழுந்ததால் மீட்புப் பணி சவால்மிக்கதாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்த விமானத்தில் 17 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் விமான ஊழியர்கள் மூவர் அடங்குவர்.
விமானப் பயணிகளில் ஓர் அமெரிக்கர், ஒரு பிரெஞ்சுக்காரர், இரண்டு சிறுவர்கள் ஆகியோர் அடங்குவர்.
ஹோண்டுராசில் உள்ள லா செய்பா விமான நிலையத்தை நோக்கி விமானம் புறப்பட்டபோது அது விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.