O/L பரீட்சை நாளை ஆரம்பம்: கல்வியால் வடக்குக்கு பெருமை சேர்க்க ஆளுநர் அழைப்பு!
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை (O/L) நாளை செவ்வாய்க்கிழமை (17.02.2026) ஆரம்பமாகின்றது. இந்நிலையில் ” பரீட்சைக்குத் தோற்றும் எமது அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கடந்த காலப் பின்னடைவுகளைத் தகர்த்தெறிந்து, இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் நீங்கள் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளவை […]













