#UKLaw #TechNews #OnlineSafety #CyberSecurity #TamilNews #48HoursRule #SafetyFirst அறிவியல் & தொழில்நுட்பம்

“48 மணி நேரம் மட்டுமே!” – டெக் நிறுவனங்களுக்குப் பிரிட்டன் அரசு விடுத்த எச்சரிக்கை.

  • February 18, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer), சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தளங்களுக்கு எதிராக ஒரு கடுமையான சட்டத்தை அறிவித்துள்ளார். பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான சமுக வலைதள வன்முறையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நபர் தனது அனுமதி இல்லாமல் நெருக்கமான அல்லது ஆபாசமான தனது படங்கள் பகிரப்பட்டுள்ளதாக  புகாரளித்தால், அந்தத் தளம் 48 மணி நேரத்திற்குள் அந்தப் படத்தை நீக்க வேண்டும் என்பது இனி சட்டபூர்வமான […]

உலகம்

காசாவில் மீளவும் துப்பாக்கிச்சூடு – இரு பாலஸ்தீனியர்கள் பலி!

  • February 18, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய தனித்தனி துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மத்தியப் பகுதியில் உள்ள அல்-முக்ரகா ( al-Mughraqa) மற்றும் தெற்கே ரஃபாவின் அல்-மவாசி (  al-Mawasi ) ஆகிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் மூன்று பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் அமைதி ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வாறான தாக்குதல்களில் மொத்தமாக 600 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன […]

உலகம்

சீனாவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்து – 12 பேர் உயிரிழப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

சீனாவின் ஹூபே  (Hubei) மாகாணத்தில் உள்ள பட்டாசு கடையில்  ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் சியாங்யாங்கில் (Xiangyang) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ள நிலையில் இவ்வாறான விபத்துகள் இடம்பெற்று வருவது மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.  

ஐரோப்பா

அயர்லாந்தில் 13 வீடுகளில் திடீர் சோதனை – 44 பைக்குகள் பறிமுதல்! 05 பேர் கைது!

  • February 18, 2026
  • 0 Comments

அயர்லாந்தில் போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக பொலிஸார் திடீர் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர். டப்ளினின் பாலிமுன் (Ballymun area of Dublin) பகுதியில் உள்ள  13 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஐந்து பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் 19 தொடக்கம் 25 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இந்த சோதனைகளின் விளைவாக சாலை போக்குவரத்து சட்டம் 2023 இன் கீழ் 44 சட்டவிரோத பைக்குகள் மற்றும் ஸ்க்ராம்ப்ளர்கள் (scramblers)  பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் […]

ஐரோப்பா

லண்டனில் இரு பேருந்துகள் மோதி விபத்து – 06 பேர் காயம்!

  • February 18, 2026
  • 0 Comments

லண்டனில் உள்ள நியூவிங்டன் காஸ்வேயில்  (Newington Causeway) இன்று இரண்டு பேருந்துகள் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 06 பேர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லண்டன் ஆம்புலன்ஸ் சேவை, பெருநகர காவல்துறை மற்றும் லண்டன் தீயணைப்புப் படை உள்ளிட்ட தரப்பினர் முதலுதவிகளை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் விபத்து தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

ஓரணியில் திரண்டு பிரிட்டன் துணை பிரதமரை சந்தித்த தமிழ்த் தலைவர்கள்!

  • February 18, 2026
  • 0 Comments

இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் பிரிட்டன் எப்போதும் துணைநிற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டனின் துணை பிரதமருக்கும், தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று (18) நடைபெற்றது. இதன்போது நல்லிணக்கம், நீதி மற்றும் தமிழ் சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது என கூறப்படுகின்றது. அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கவும், நீதி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், தமிழ் பிரதிநிதிகளின் குரலை தொடர்ந்து […]

இலங்கை செய்தி

ரணிலின் மனைவியிடமும் விசாரணை வேட்டை: 20 ஆம் திகதி அழைப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் Ranil Wickremesinghe பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவிடம் Maithri Wickremesinghe குற்றப் புலனாய்வு பிரிவினர் CID வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர். இதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அவருக்கு கொள்ளுபிட்டிய பொலிஸார் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவின் நிதிய குற்ற விசாரணைப் பிரிவுக்கே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. தனது தனிப்பட்ட பயணத்துக்கு அரச நிதியை பயன்படுத்தினார் […]

இலங்கை

இரு பேருந்துகள் மோதி கோர விபத்து – 25 பேர் வைத்தியசாலையில்!

  • February 18, 2026
  • 0 Comments

ஹம்பாந்தோட்டை – மாத்தறை பிரதான வீதியின் பல்லேமலல பகுதியில் இன்று (18) பிற்பகல் 1 மணியளவில், இரு பேருந்துகள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றும், தனியார் பேருந்தொன்றும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் 25 பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டு பயணிகள் மூவர் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். தெஹியத்தக்கண்டியிலிருந்து காலி நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து, தனக்கு முன்னால் […]

இலங்கை செய்தி

பிரதமர் மோடியுடன் விசேட சந்திப்பை நடத்தவுள்ள ஜனாதிபதி அநுர!

  • February 18, 2026
  • 0 Comments

‘AI Impact 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இன்று முதல் 20 ஆம் திகதிவரை முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். அதற்கமைய ஜனாதிபதிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோருக்கும்(Sergio Gor) இடையிலான சந்திப்பு இன்று (18) முற்பகல் நடைபெற்றது. இதேவேளை, AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள அரச தலைவர்களுக்காக […]

இலங்கை செய்தி

7 மாத குழந்தை உயிரிழப்பு: யாழில் சோகம்!

  • February 18, 2026
  • 0 Comments

இருதயம் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட கடுமையான நோய் பாதிப்பு காரணமாக ஏழு மாதப் பெண் குழந்தையொன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – நுணாவில் பகுதியைச் சேர்ந்த நிரூபன் ரெஸ்மிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்தக் குழந்தை பிறந்தது முதல் இருதய நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. எனினும், மேலதிக சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் […]

error: Content is protected !!