உலகம்

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யியோலிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

  • February 19, 2026
  • 0 Comments

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யியோலிற்கு ( Yoon Suk-yeol) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கட்டாய இராணுவ சட்டத்தை அமுல்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அவரின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. “இராணுவச் சட்டத்தின் பிரகடனம் மிகப்பெரிய சமூக இழப்புகளை ஏற்படுத்தியது, மேலும் பிரதிவாதி அதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் நீதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். இந்நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் முன்னாள் பாதுகாப்பு […]

இலங்கை

லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடா?

  • February 19, 2026
  • 0 Comments

எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இருக்காது என்றும் போதுமான அளவு இருப்பு உள்ளது என்றும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சில வதந்திகள் பரவியதை தொடர்ந்து இது தொடர்பில் விளக்கமளித்துள்ள நிறுவனம்,  தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. லிட்ரோ கேஸிற்கான சந்தையில் எதிர்பாராத தேவை அதிகரித்ததால் எரிவாயு விநியோகத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டதாக நிறுவனத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். பிப்ரவரி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் […]

கருத்து & பகுப்பாய்வு

இரட்டை குடியுரிமையாளர்கள் கவனத்திற்கு – அடுத்த வாரம் முதல் அமுலாகும் புதிய நடைமுறை

  • February 19, 2026
  • 0 Comments

2026 முதல் இரட்டை பிரித்தானிய குடியுரிமையாளர்களுக்கு புதிய எல்லை விதி – என்ன மாற்றம்? வெளிநாடுகளில் வாழும் இரட்டை குடியுரிமை பெற்ற பிரித்தானியர்களுக்கு வரவிருக்கும் மாற்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. “நாம் பிரித்தானிய குடிமக்கள் அவ்வாறிருக்கமையில் நம் சொந்த நாட்டுக்குள் நுழைய கூடுதல் ஆவணம் ஏன்?” என்ற சந்தேகம் பலரிடமும் உருவாகியுள்ளது. 2026 பெப்ரவரி 25 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய எல்லை கட்டுப்பாட்டு நடைமுறைகள், குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பாதுகாப்பு […]

உலகம்

ட்ரம்ப், நெதன்யாகுவை நாஜி சீருடையில் சித்தரிக்கும் சுவரொட்டிகளை கைப்பற்றிய பொலிஸார்!

  • February 19, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உலகத் தலைவர்களை நாஜி சீருடையில் சித்தரிக்கும் நையாண்டி சுவரொட்டிகளை ஆஸ்திரேலிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கான்பெராவில் (Canberra) உள்ள டிஸ்சென்ட் கஃபேயில் (Dissent) இருந்து குறித்த சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கஃபே உரிமையாளர் டேவிட் ஹோவ் (David Howe) கலைப்படைப்பை ஒரு குற்றச் சம்பவமாகக் கருதியதற்காக  பொலிஸாரின் மேற்படி நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் புதிய சட்டம் தடைசெய்யப்பட்ட சின்னங்களை பொதுவில் காட்சிப்படுத்துவதை குற்றமாக்குகிறது, ஆனால் […]

இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் அமெரிக்க கடற்படை கட்டளைத் தளபதி!

  • February 19, 2026
  • 0 Comments

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் Admiral Steve Koehler மூன்று நாட்கள் பயணமாக இன்று (19) இலங்கை வந்தார். 21 ஆம் திகதிவரை நாட்டில் தங்கி இருக்கும் அவர் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன், பேச்சுக்களை நடத்துவார் என அமெரிக்க தூதுரகம் தெரிவித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறுதித்தன்மையில் ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பன பற்றியே அவர் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பயணம், […]

அரசியல் இலங்கை செய்தி

சிறிதரனின் கதிரைக்காக சபையில் அர்ச்சுனா சண்டை!

  • February 19, 2026
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக இரா. சாணக்கியன் Chanakyan நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிதரன் Siridaran எம்.பிக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. Arjuna கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அர்ச்சுனா எம்.பி., “எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கே எதிரணியில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படும். இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார். அப்படியானால் சிறிதரனுக்கு […]

உலகம்

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : தற்காலிகமாக மூடப்பட்ட விமான நிலையம்!

  • February 19, 2026
  • 0 Comments

ஜெட் ப்ளூ விமானம் அவசரமாக தரையிறங்கியதை அடுத்து, நியூவார்க் லிபர்ட்டி ( Newark Liberty) சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. புளோரிடாவின் பாம் பீச்சிற்குச் செல்லவிருந்த ஏர்பஸ் A320 விமானமான ஜெட் ப்ளூ விமானம் புறப்பட்ட சிறுதி நேரத்திலேயே இயந்திர கோளாறு தொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளது. விமானியின் அறையில் புகை வந்ததாகக் குழுவினர் தெரிவித்தனர். இதனையடுத்து  விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.   பயணிகள் ஸ்லைடுகள் வழியாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் குறிப்பிடத்தக்க விமான தாமதங்களுக்கு வழிவகுத்தது, நியூவார்க்கிலிருந்து […]

இந்தியா செய்தி

திடீர் திருப்பம்: தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தது தே.மு.தி.க.!

  • February 19, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விடயங்கள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் யாருடன் கூட்டணி என்ற விடயத்தில் மௌனம் காத்து வந்த தே.மு.தி.க. இன்று தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. தமிழகத்தின் ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சங்கமித்துள்ளது. சென்னையில் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று முற்பகல் இதற்குரிய நிகழ்வு நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் […]

உலகம்

காசாவில் போரால் மாண்டவர்களின் எண்ணிக்கை மதிப்பிட்டதை விட அதிகம்!

  • February 19, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய போரால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை முன்பு மதிப்பிட்டதை விட அதிகமாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் முன்னணி மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்ட சுயாதீன ஆய்வில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 75,000 க்கும் மேற்பட்ட “வன்முறை மரணங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காசா சுகாதார அமைச்சகத்தின் (MoH) நிர்வாக பதிவுகள் ஒரு அதிகப்படியான எண்ணிக்கையை விட ஒரு பழமைவாத “தளத்தை” பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி […]

இலங்கை செய்தி

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவரஞ்சினி நியமனம்!

  • February 19, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) திருமதி சிவச்செல்வன் சிவரஞ்சினி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (19.02.2026) காலை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந்நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்கவுள்ள திருமதி சிவச்செல்வன் சிவரஞ்சினி, இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நியமனம் […]

error: Content is protected !!